2013
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 2013 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 2013 MMXIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 2044 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2766 |
| அர்மீனிய நாட்காட்டி | 1462 ԹՎ ՌՆԿԲ |
| சீன நாட்காட்டி | 4709-4710 |
| எபிரேய நாட்காட்டி | 5772-5773 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2068-2069 1935-1936 5114-5115 |
| இரானிய நாட்காட்டி | 1391-1392 |
| இசுலாமிய நாட்காட்டி | 1434 – 1435 |
| சப்பானிய நாட்காட்டி | Heisei 25 (平成25年) |
| வட கொரிய நாட்காட்டி | 102 |
| ரூனிக் நாட்காட்டி | 2263 |
| யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
| கொரிய நாட்காட்டி | 4346 |
ஆண்டு 2013 (MMXIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். இது கி.பி. 2013ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 13ஆம் ஆண்டு மற்றும் 21ஆம் நூற்றாண்டின் 13ஆம் ஆண்டாகும். மேலும் 2010களின் நான்காம் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 11 - வடக்கு மாலியில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக பிரெஞ்சுப் படையினர் தமது ஐந்து-மாத படை நடவடிக்கையை ஆரம்பித்தனர்.[1]
- பெப்ரவரி 15 - உருசியாவின் மத்திய ஊரல் பகுதியில் செல்யாபின்ஸ்க் நகரில் எரிவிண்மீன் தாக்கியதில் ஏற்பட்ட அதிர்வில் கட்டடங்கள் சேதமடைந்ததில் நானூறுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.[2]
- பெப்ரவரி 28 - திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்தார்[3]
- மார்ச் 13 - கர்தினால் பிரான்சிசு 266வது திருத்தந்தையாக தேர்த்ந்டுக்கப்பட்டார்.[4]
- மார்ச் 24 - மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு போராளிகள் தலைநகர் பாங்கியைக் கைப்பற்றியதை அடுத்து அரசுத்தலைவர் பிரான்சுவா பொசிசே காங்கோவிற்கு தப்பி ஓடினார்.[5]
- ஏப்ரல் 15 - 2013 பாஸ்டன் மாரத்தான் குண்டுவெடிப்புக்கள்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பாஸ்டன் மாரத்தான் நிகழ்வில் குண்டு வெடித்ததில் மூவர் கொல்லப்பட்டனர்.[6]
- ஏப்ரல் 24 - டாக்கா நகரின் சாவார் உள் மாவட்டம் அருகே மாடிக் குடியிருப்புகள் இடிந்து வீழ்ந்ததில் 1,129 பேர் கொல்லப்பட்டனர். 2500 பேர் காயமடைந்தனர்.[7]
- மே 27 - கனடா நாட்டின் பகுதியில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய பனியில் மூடியிருந்த கடல் பாசித்தாவரம் உயிர்த்தெழுந்தது.[8]
- ஜூன் 14-30 - இந்தியாவின் உத்தராகண்டம், இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் 5,700 பேர் கொல்லப்பட்டனர்.